Link: https://www.seithy.com/breifNews.php?newsID=240525&category=TamilNews&language=tamil

யாழ். மாநகர முன்னாள் முதல்வர் விசுவநாதன் காலமானார்!
[Monday 2020-02-10 05:00]
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய ராஜா விசுவநாதன் நேற்று அவுஸ்ரேலியாவின், சிட்னி நகரில் தனது 94வது வயதில் காலமானார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய ராஜா விசுவநாதன் நேற்று அவுஸ்ரேலியாவின், சிட்னி நகரில் தனது 94வது வயதில் காலமானார்.
1979 முதல் 1983 வரை யாழ்பாணத்தின் மாநகர முதல்வராக கடமையாற்றிய ராஜா விசுவநாதன், தமிழர்களின் உரிமைகளுக்காக பல்வேறு அரசியல் தளங்களில் முன்னின்று உழைத்ததுடன் பல்வேறு சமூக சமூகச் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.
ராஜா விசுவநாதன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தந்தையார் என்பதும் குறிப்பிடத்தக்கது.