1984ஆம் ஆண்டில் அமெரிக்கா கூறியது, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்.

1984ஆம் ஆண்டில் அமெரிக்கா கூறியது, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்.

இன்று 2200வது நாளில், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும், எதிர்காலத்தில் தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது.

தமிழர்களையும் பண்பாட்டையும் காக்க முனைந்த அமரர் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு நாமும் தலை வணங்குகிறோம்.

துணைவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் ‘தமிழமுதம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமையும்,அரசியல் கோரிக்கைகள் கொண்ட நினைவு தூபி அமைப்பதைத் தடுக்கத் தவறியமை தொடர்பிலும் இராணுவப் புலனாய்வு பிரிவினரின் உத்தரவின் பேரில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பேராசிரியர் விக்கினேஸ்வரன் போன்ற தலைவர்கள் தமிழர்களுக்கு அதிகம் தேவை.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வடக்கு-கிழக்கு இணைப்பு, குருந்தூர் மலை, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் நீதித்துறை என்பதை சுட்டிக் காட்டுகின்றன. ஒருவேளை இந்த இலங்கையின் நீதித்துறை சிங்களவர்களுக்குப் பயன்படலாம்.

வடக்கு கிழக்கில் தமிழ் நீதியரசர்களின் தீர்மானம் எதுவாக இருந்தாலும், அரசாங்கமோ, கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றங்களோ, உச்ச நீதிமன்றமோ அதனை மதிக்காது நிராகரித்து விடும்.

1983 சிங்களப் படுகொலைக்குப் பின்னர், 1984 இல் அமெரிக்கா பின்வரும் மதிப்பீட்டைச் செய்தது:

ஜூன் 1984 ‘அமெரிக்க புலனாய்வு மதிப்பீடு’ மேலும் அறிவிக்கிறது “தமிழ் கோரிக்கைகள் அநேகமாக ஒரு கூட்டாட்சி கட்டமைப்பின் மூலம் திருப்தி அடையும், அது தமிழர்கள் பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மீதான கட்டுப்பாட்டை உத்தரவாதம் செய்யும்” – அதாவது இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதி .

“பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்” என்று வாஷிங்டன் நம்புவதாக அந்த ஆவணம் கருத்து தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு தமிழினப் படுகொலை மற்றும் இனப்படுகொலைக்குப் பிறகு, அமெரிக்கக் கருத்து, கொன் பெட்ரலிசம் அல்லது முழுத் தமிழ் இறையாண்மைக்கு மேலும் சென்றிருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

எனவே தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவியை தமிழர்களாகிய நாம் அனைவரும் கோர வேண்டும்.

சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத் தரும் என்று நம்ப வேண்டாம். அவர்கள் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.

ரஷ்யாவின் புட்டின் மற்றும் அவரது தளபதிகளால் உக்ரைன்கள் மீதான கொடூரமான கொலைகளைக் கண்டிக்காமல் ஐ.நா வாக்கெடுப்பில் நடுநிலை வகித்ததால் இந்தியா தனது மனித உரிமை அந்தஸ்தை இழந்தது.

ஐ.நா.வின் வாக்கெடுப்புக்குப் பிறகு இந்தியா உலகளவில் தனது செல்வாக்கை இழந்தது.

நமது இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவிக்காக பிரார்த்தனை செய்வோம்.

நன்றி
கோ.ராஜ்குமார்
செயலாளர்
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்.
28/02/2023

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்