திரு. சம்பந்தன் தனது நோயைப் பற்றி பொய் சொல்கிறரா ? அவர் உண்மையில் நோய்வாய்ப்பட்டிருந்தால், எங்கள் கவலைகள். ஆனால் கடந்த காலத்தில் தமிழரின் விவகாரத்தில் முக்கிய முடிபு எடுக்க வேண்டிய நேரத்தில் சம்பந்தர் தனக்கு இருதய நோய் என்று இந்தியா சென்று தன்னை மறைத்து கொள்வார். இப்பொது “தமிழர்களை கொலை செய்ய காரணமாய் இருந்து வருகின்ற மகா வம்சத்தின்” புத்தபிக்கு உடலை முற்றவெளி மைதானத்தில் இராணுவம் தகனம் போது, தன்னை ஒழிப்பதட்கே மருத்துவமனையில் தங்கினாரோ? சம்பந்தன் சிங்களவரிடம் நல்ல பெயர் எடுத்தால் மட்டும் தொடர்ந்து ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும். சம்பந்தன் பிக்குக்கு கடைசியாக அஞ்சலி செலுத்தவில்லை, ஏனெனில் தமிழர்கள் கிளர்ச்சி செய்வார்கள். பிக்குவை தகனம் செய்த இடம் தமிழரை இழிவு படுபடுத்த்தும் செயல். தமிழ் மக்களின் பண்பாட்டில் இறந்த வர்களுக்கான இறுதி கிரியைகள் தகனம் செய்யும் முறைகள் தனி சிறப்பானவை. மக்கள் கூடுமிடங்கள் ஆலயங்கள் போன்றவற்றில் தகனங்கள் இறுதி கிரியைகள் செய்வதில்லை. நிலை இவ்வாறிருக்க யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரியகுளம் நாகவிகாரையின் பீடாதிபதியின் உடலை தகனம் செய்தது தமிழரின் முதுகு எலும்பை உடைப்பதட்க்கு . இது தமிழ் மக்களின் பண்பாட்டை மலினப்படுத்துவதாகவே அமையும். மேலும் இவ்வாறான நடவடிக்கைகளினால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகாது. மாறாக விரிசல் நிலையே அதிகரிக்கும். இராணுவம் பௌத்தமே மேலானது, வடமாகாணம் தங்களுடைய மண் என்னும் சிந்தனையில் செயற்படுகிறது. அதனை இலங்கை அரசாங்கமும் அங்கீகரித்து தேவையான ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக இராணுவத்துக்கு கொடுக்கிறது. இந்நிலையில், 16 ஊமைகளும் (த.தே. கூ பா. உறுப்பினர்கள் ) எங்கே? அவர்களும் ஒழித்து விடடார்கள். சுமந்திரன் பங்கு: திரு. சுமந்திரன் புத்தமதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். திரு. சுமந்திரன் படி, இங்கே நடந்தது புத்த மதத்தை முதன்மையாக்கவே **கொழும்பில் உள்ள சிங்கள நிருபர் கூறினார் சுமந்திரனுக்கு 2016 ல் பாதுகாப்பு மந்திரி ருவான் விஜேவர்த்தேனே தமிழரை பலவீன படுத்தப்படவேண்டும் அல்லாவிடல் தொடர்ச்சியாக சுமந்திரனுக்கும் TNA க்கும் உதவிக்கள் செய்ய முடியாது என்றும் சொல்லப்பட் ட து. இதன் காரணமாக சுமந்திரன் கொடுத்த இந்த கபட புத்தியை “யாழ்.முற்றவெளி மைதானத்தில் தகனம் செய்வதை ” சிங்களவர்கள் பாவித்தார்கள் என்று நமது சிங்கள நிருபர் கூறினார். இதனை தமிழ் நிருபர்கள் சுமந்திரனிடம் துணிந்து கேட்கவேண்டும் . இவை யாவும் “தமிழ் ஈழம்” தான் ஒரு முடிபு என்பதை நினைவுபடுத்துகிறது. |
