இந்து கோவில்கள் மீது சிங்கள ஆக்கிரமிப்பு நடந்து கொண்டிருக்கும் போது 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பிய அரசியல்வாதி எங்கே?
ஏன் இந்த 13வது திருத்த உடன்படிக்கையாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள்? இந்து கோவில்களை நோக்கிய இலங்கையர்களின் மூர்க்கத்தனமான நடவடிக்கையை தடுக்க மோடியின் உதவியை அவர்கள் ஏன் அழைக்கவில்லை.
இந்தியா ஒரு இந்து நாடு. தற்போதைய பிரதமர் மோடி ஒரு தீவிர இந்து. இந்துக்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது பிற மதத்தினரை ஒடுக்கினார் என்று மோடியின் வரலாறு கூறுகிறது.
இலங்கை தமிழர்களின் வடகிழக்கில் கோவில் ஆக்கிரமிப்பு நடக்கும் போது மோடி அமைதியாக இருப்பது ஏன்?
13வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரிய கடிதத்தில் இந்திய வேண்டுகோளுக்கு இணங்க கையெழுத்திட்ட இந்த இந்திய சார்பு ஈழ தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
இந்த அரசியல் வாதிகள் கடிதத்தில் கூட்டாக கையெழுத்து போட்டு இந்தியாவுக்கு உதவி செய்தவர்கள், கைப்பற்றப்பட்ட இந்து கோவில்களை திரும்ப பெற இலங்கை அரசை வற்புறுத்த இந்த அரசியல்வாதிகள் இந்தியாவிடம் உதவி கேட்கும் நேரம் இது.
இந்துக் கோவில்கள் இலங்கையின் சிங்கள பௌத்தக் கோவில்களாக மாற்றப்படுகின்றன. இது தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் செயலாகும்.
பூர்விக தமிழர்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து விரட்டியடிக்க சிங்களவர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வந்த உத்தி இது.
இந்திய வேண்டுகோளுக்கு இணங்க 13இல் கையெழுத்திட்ட கீழே பட்டியலிடப்பட்டுள்ளவர்கள் விழித்தெழுந்து, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் உதவி கேட்க குரல் எழுப்ப வேண்டும்.
- மாவை சேனாதிராஜா
- தர்மலிங்கம் சித்தாத்தன் (புளொட்)
- செல்வம் அடைக்கலநாதன் (டெலோ)
- முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.)