அன்னை பூபதி அம்மா அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

அன்னை பூபதி அம்மா அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

வவுனியா நீதிமன்றம் முன்பு, ஏ9 வீதியில், 2983வது நாளாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்கள், 19.04.2025 அன்று அன்னை பூபதி அம்மா அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை நினைவு கூர்ந்தார்கள்.

இதன் போது, அன்னையின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர், தமிழ் மக்களின் இறைமையை பாதுகாப்பதற்காகவும், உரிமைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்த அன்னைக்கான அஞ்சலியை தமிழர் தேசம் செலுத்திக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தை சர்வதேச பொறிமுறையூடாக, சர்வதேச மத்தியஸ்தத்தின் ஊடாகவே தீர்க்க முடியும். குற்றவாளிகளே பிரச்னையை தீர்ப்பது நீதியாக அமையாது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வைப் பெறுவதற்கு இறையாண்மை அவசியமானது. அதனை நோக்கியே எமது போராட்டங்கள் அமைந்துள்ளன. இறையாண்மை எமக்குத் தேவை என்பதை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக சர்வதேசத் துக்கு உரத்துச்சொல்வோம்-என்றனர்.