விக்னேஸ்வரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வடகிழக்கு கூட்டு மற்றும் சமஷ்டி அல்லது ஏதேனும் அரசியல் தீர்வை ஆதரிக்கிறதா ?

விக்னேஸ்வரனின் தேர்தல் அறிக்கையில் வடகிழக்கு இணைப்பு மற்றும் கூட்டாட்சி பற்றி பேசவில்லை என்று சமீபத்திய தமிழ்வின் செய்தி வெளியிட்டது. அதாவது விக்னேஸ்வரன் அரசியல் தீர்வுக்கு அல்லவா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் விளையாடுகிறாரா?

திரு விக்னேஸ்வரன் வெளியே வந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ்வின் வெளியிட்ட விக்னேஸ்வரனின் சமீபத்தியது இங்கே கீழே .

Link: https://www.tamilwin.com/politics/01/235243?ref=home-feed

தமிழ் மக்களின் கோரிக்கைளை யார் ஏற்கிறாரோ அவருடன் கூட்டுசேருவேன் !! விக்னேஸ்வரன் அறிவிப்பு

பயங்கரவத தடைச்சட்டத்தை நீக்குவதையே தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கவுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடுத்துவரும் தேர்தல்களில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் விலக வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், பொது மக்களின் காணிகள் விடுவித்து அவர்களின் நிம்மதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்த வேண்டும்.

அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் முதலானவற்றையே அடுத்துவரும் பொதுத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞானக் கொள்கையாக இருக்கும்.

இதற்கு யார் உடன்படுகிறார்களோ அவர்களுடன் மாத்திரமே கூட்டணி வைத்துக்கொள்வேன் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.