இருவருமே புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தைக் கொண்ட வலுவான ஒற்றையாட்சி விரும்புபவர்கள் .
ஒற்றையாட்சியில் என்ன தவறு? தமிழர்களின் பாரம்பரிய நிலமான வட-கிழக்கில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பொருள். ஒரு நபருக்கு அவர் வசிக்கும் இடத்தில் உரிமை இல்லையென்றால், அந்த நபரை அடிமையானவர் என்று பொருள்.
சுதந்திரம் பெற்றதிலிருந்து, ஒற்றையாட்சி காரணமாக தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர். சிங்கள குடியேற்றம், சிங்களவருக்கு நிலங்களை இழத்தல், சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புகள், இன பாகுபாடு, இன அழிப்பு, மற்றும் தமிழர்களுக்கு எதிரான அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்படட கொலைகள் துன்புறுத்தகள் அனைத்தும் ஒற்றையாட்சி அரசின் தயாரிப்பும் குணாதியமும்.
எனவே , ஒற்றையாட்சி அரசு தமிழர்களின் எதிரி.
சிங்கள புத்தம் வன்முறை இனப்படுகொலையை ஊக்குவித்து வருகிறது. பண்டைய தமிழர்களை விரட்ட புராணக் கதையான மகா சங்கம் எழுப்பட்டது . பூச்சிகளைப் போல மற்றவர்களைக் கொல்லலாம் என்று மகா சங்கம் சொல்கிறது. மற்றவர்களைக் கொல்வது மன்னனை திருப்திப்படுத்தும் என்கிறது மகா சங்கம் . மற்றவர்கள் என்பவர்கள் புத்த மதமற்ற தமிழர்கள், இந்துக்கள் என்று பொருள்.
இந்த கொடூரமான சிங்கள புத்தம் பர்மாவில்(மியான்மார்) உள்ள கொடுமையான புத்தம் போன்றது.
சிங்கள மகா சங்கமும் அதன் புத்தமும் தமிழர்களின் நண்பர் அல்ல.
இந்த இரு வேட்பாளர்களும் வலுவான ஒற்றையாட்சி அரசையும், மக்கா சங்க புத்த மதத்தையும் தழுவி, ஆசீர்வாதத்தைப் பெற இனவெறி கொண்ட மகாநாயக்காவிடம் கண்டிக்குச் சென்றனர்.
எனவே தமிழர்கள் சிங்களவருக்கு வாக்களிக்கக்கூடாது. இது, தமிழரின் அரசியல் விருப்பத்தை தீர்க்க சர்வதேச தலையீடு வேண்டும் என்று அது சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை அனுப்பும்.
சிங்கள அடக்குமுறைக்கு எதிரான தமிழர் போரை தோற்கடிக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இலங்கைக்கு உதவியது என்பதை நினைவில் கொள்க.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கான எந்தவொரு ஸ்ரீலங்கன் வாக்குறுதியும் இரு வேட்பாளர்களால் நிறைவேற்றப்படாது, எனவே தமிழர்கள் தங்கள் அரசியல் விருப்பத்தை அடைய உதவுவது அந்த 3 நாடுகளின் கடமையாகும்.
சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்காததன் மூலம் இதை வெளிப்படுத்த ஒரே வழி.
தமிழர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தேர்தல்களைப் புறக்கணிப்பது. மற்றொன்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பது. தமிழர்களுக்கு புத்திசாலித்தனமான மற்றும் சிறந்த வழி தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதாகும்.
“சிங்களவர்களால் நடத்தப்படும் இனப்படு கொலையை நிறுத்த, தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பான சுதந்திரமானதுமான தாயம் தேவை என்பதை தமிழர்கள் மறக்க கூடாது.”
முயற்சி வளர்ச்சி தரும்.
நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்
Be the first to comment