காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணாமல்போனவர்களின் உறவுகளினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 334 ஆவது நாள் நிறைவடைகின்றது. வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமானதை முன்னிட்டு இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை காணாமல்போனோரது உறவுகள் மேற்கொண்டனர்.
தமது போராட்டத்திற்கு இலங்கை அரசானது தீர்வினைப் பெற்றுத்தராது என்றும் தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் சர்வதேசத்திடம் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்து காணாமற்போன உறவுகள் போராட்டத்தினை மேற்கொண்டனர். இன்று காலை 11.30 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் போராட்ட களத்திற்குச் சென்ற உறவுகள் அங்கிருந்து தமது கவனயீர்ப்பினை மேற்கொண்டனர். போராட்டத்தில் பெருமளவான உறவுகள் கலந்துகொண்டனர்.
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்
Be the first to comment