இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.இரட்டை மனத்துடன் தடுமாறும் சிறிதரன் MP கீழே |
இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். சிறிதரனுக்கு புறக்கணிக்க முடியவுமில்லை அல்லது உத்தியோகபூர்வமாக பங்குபெற முடியவுமில்லை. சில வாரங்களுக்கு முன்னர் திரு. சிறிசேன , “சமஷ்டியும் அல்லது வடகிழக்கு இணைப்பும் இல்லை, அதை தடுக்க அனைத்தையும் செய்வார் என்றார்.” திரு. சிறிசேனவின் தமிழரை அடிமையாக்கும் அறிக்கையின்படி, தமிழ் தேசப்பற்று கொண்ட தமிழர்கள் அல்லது தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தமிழர் கூட இந்த நிகழ்ச்சியை புறக்கணித்திருக்க வேண்டும். ஒரு கறுப்பு கொடியைக் காட்டி சிறிசேனவை தமிழ் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோஷமிட தமிழர்களை கேட்டிருக்க வேண்டும். இது தான் ஓர் உண்மையான தலைமை. திரு. சிறிதரன் எந்த தெரிவு செய்யப் பட் ட எம் பி அல்லது எந்த தமிழ் தேசபக்தியுள்ளவரோ அவரது மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க மாட்டார். அவரது அனுமதியின்றி எவரும் ஏதேனும் ஒரு காரியத்தை செய்தால், அவருடைய கும்பல் அவர்களை நோக்கி குண்டர்கள் போல நடந்து கொள்வார்கள் . திரு. சிறிதரன் சுவரின் மேல் பூனை போல செயல்படுகிறார். சிறிசேனவின் பக்கத்திலோ அல்லது தமிழ் பக்கத்துடனான எங்கு எங்கு செல்ல வேண்டும் என்பது பற்றி தடுமாறுகிறார். அவர் ஒரு ருசி கண்ட பூனை. சிறிசேனவின் பக்கம் நிறைய சலுகைகளும் பதவிகளும் உள்ளன. சிறிதரன் அவர்களை இழக்க விரும்பவில்லை. உண்மையான தேசப்பற்று உள்ள தமிழர்கள் கறுப்பு கொடி காட்டியிருப்பார்கள். சிறிசேனவை தமிழ் நிலத்தை விட்டு வெளியேறு என்று கதறி இருப்பார்கள் . சிங்களம் தமிழ் அரசியல் உரிமைகளை ஏற்றுக் கொள்ளாத போது, தமிழர்கள் 1970 களில் செய்த செயல்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஜே ஆர் ஐ கல்லால் எறிந்து துரத்தியவர்கள் அன்று. இந்த சிங்களமய அரசியல்வாதிகளுக்கு (வடகிழக்கு இணைந்த கூட்டாட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்) எதிராக தமிழ் மக்கள் போராட வேண்டும். அவர்கள் வடகிழக்குப் பகுதியில் வரும்போது, “திரும்பி போ” என்று கூவ வேண்டும். இது ஒரு ஜனநாயகத்தின் பங்கு. இந்த செய்தியை உலகிற்கு அனுப்ப வேண்டும். தமிழர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் இன்னும் துன்பப்படுகிறார்கள். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கும். நன்றி, |
Be the first to comment